×

கீழப்பாவூர் பகுதியில் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைச்சரிடம் பேரூராட்சி தலைவர் மனு

பாவூர்சத்திரம், ஏப்.2:  கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்என பேரூராட்சித்தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் சுமார் 12 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் கீழப்பாவூர் மைதானம், கருமடையூர் பகுதிகளில் இயங்கி வந்த அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டதால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. மற்ற அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டிடங்களில் இயங்கி வருகிறது. எனவே இடிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கும், வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் அங்கன்வாடிகளுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Mayor ,Minister ,Buildings ,Anganwadi Centers ,Keelappavoor ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!