×

தஞ்சை ஜிஹெச் வளாகத்தில் தொடர் பைக் திருட்டு

தஞ்சை, ஏப்.2: தஞ்சை பகுதியில் அடிக்கடி பைக்குகள் திருட்டு போகும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். முக்கியமாக அரசு மருத்துவமனை வளாகங்களில் வைக்கப்படும் பைக்குகள் நோட்டம் விடப்பட்டு திருடப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் அன்னமங்கலம் அரண்மனை குறிச்சி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (26). சம்பவத்தன்று இவர் தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதேபோல் கரம்பக்குடியை சேர்ந்த செல்வம் (55) என்பவர் ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டியும் காணவில்லை.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக தஞ்சை நகர் பகுதியில் பைக்குகள் திருட்டு அதிகளவில் நடந்து வருகிறது. முக்கியமாக அரசு மருத்துவமனை வளாகம், புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதி போன்று மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியிலேயே இதுபோன்று பைக் திருட்டு சம்பவங்கள் நடப்பது மக்களை அச்சதில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் பைக் திருடர்களை விரைந்து கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tanjore GH ,
× RELATED தஞ்சை ஜிஹெச்சில் பரபரப்பு; முதியவர்...