×

பயிர் காப்பீடு தொகை கேட்டு கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை

வேதாரண்யம், ஏப்.2: தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு கேட்டு வங்கியை 6 மணி நேரம் வரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இச்சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியில் சென்ற ஆண்டு இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள 519 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர். இவர்களில் 449 விவசாயிகள் வங்கியில் கடன் பெற்றவர்களும், 75 நபர்கள் கடன் பெறாத விவசாயிகளும் உள்ளனர்.
இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்த 75 நபர்களுக்கு இன்று வரை பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் போராட்டம் அறிவித்து இருந்தனர். வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் விவசாயிகளை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக பயிர் காப்பீட்டு நிறுவனத்தினர் உறுதி அளித்தனர். ஆனால் நேற்று வரை நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் உம்பளச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துளாசபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிவராணம் கேட்டு வங்கியை காலை முதல் முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்து வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் பயிர் காப்பீட்டு துறையில் இருந்து அதிகாரிகள் வர வேண்டும் என வலியுறுத்தினர். சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு பிறகு வேளாண்மைத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் சொன்ன கருத்தை விவசாயிகள் ஏற்கவில்லை. இதனால் வங்கியில் இருந்து விவசாயிகள் கூச்சலிட்டன. போலீசார் விவசாயிகளை சமாதானம் செய்து நாளை தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறினர். இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். கூட்டுறவு வங்கியை விவசாயிகள் 6 மணி நேரம் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Co-operative Bank ,
× RELATED நாமக்கல் கூட்டுறவு வங்கி தலைவராக ராஜேஸ்குமார் எம்பி பொறுப்பேற்பு