×

தொடர்ந்து பணி வாய்ப்பு வழங்க கோரி கரூர் அரசு மருத்துவமனை பன்னோக்கு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கரூர், ஏப்.2: தொடர்ந்து பணிவாய்ப்பு வழங்க கோரி கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். கொரோனா காலத்தில் லேப், நர்சிங் போன்ற பணிகளுக்கு அரசு சார்பில் தமிழகம் முழுதும் பன்னோக்கு பணியாளர்கள் சேர்க்கப்பட்டனர். கரூர் அரசு மருத்துவமனையில் இதுபோல 30க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், பன்னோக்கு பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணியளவில் கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து திரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து பணி வாய்ப்பு வழங்க வேண்டும். 4 மாதமாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மருத்துவஅதிகாரிகள் மற்றும் பசுபதிபாளையம் போலீசார் இவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags : Karur Government Hospital ,
× RELATED திண்டுக்கல்லில் இருந்து 43 கொரோனா...