×

அரசு பள்ளிக்குள் புகுந்து ஹெச்.எம்மிற்கு கொலை மிரட்டல்

மோகனூர், ஏப்.2: மோகனூர் அருகே அரசு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.மோகனூர் அருகே வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பாடவேளையின்போது, வளையப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜெயராமன் மகனும், ஆம்புலன்ஸ் டிரைவருமான பிரவின்(20) என்பவர் டூவீலரில் அத்துமீறி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். அதனை தலைமையாசிரியர் சுப்பிரமணி தட்டிக்கேட்டபோது, ‘நான் வந்தால் உனக்கென்ன. பள்ளிக்கு வருவேன், போவேன். அதனை கேட்க நீ யார்? என்று தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிந்து, பிரவினை கைது செய்தனர். அவரிடமிருந்து டூவீலரை பறிமுதல் செய்தனர். பின்னர், நாமக்கல் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆஜர்படுத்தி, நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.



Tags : HM ,
× RELATED ஊட்டி காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ காலமானார்