×

வடசேரி, அண்ணா பஸ் நிலையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.: எஸ்.பி. தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், ஏப்.2: தமிழகத்தில் கஞ்சா, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் சோதனைகள் மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமரி மாவட்ட காவல்துறை சார்பில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலை போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  நுழைவு பகுதியில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், “போதை பழக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதில் பொதுமக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. போதை பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனே போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் வாட்ஸ்ஆப் எண்ணை ஒரு மூதாட்டியை வைத்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிமுகம் செய்து வைத்தார்.  தொடர்ந்து அண்ணா பஸ் நிலையம், நாகர்கோவில் ரயில்நிலையத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சியில்  டிஎஸ்பி நவீன்குமார், போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Anna Bus Stand ,Vadacherry ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்