×

உறவுகள் கைவிட்டாலும் விலகாத உறவு புத்தகங்களே பொன்னம்பல அடிகளார் பேச்சு

காரைக்குடி, மார்ச் 31: காரைக்குடியில் மாநில அளவிலான 20ம் ஆண்டு புத்தக திருவிழா துவக்கவிழா நடந்தது. தலைவர் முத்துபழனியப்பன் வரவேற்றார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்து பேசுகையில், உறவுகள், நண்பர்கள் நம்மை கைவிட்டாலும் நம்மை விட்டு விலகாத உறவு புத்தகங்களே. கற்பதால் தான் சமூகத்தில் மதிக்கப்படுவோம். நமது சிக்கல்களை திறக்கும் திறவுகோல் புத்தகங்களே. மகத்தான மனிதர்களின் வாழ்க்கையை புத்தகங்களில் தான் தெரிந்து கொள்ள முடியும் என்றார். நகர்மன்ற தலைவர் முத்துத்துரை துவக்கிவைத்தார். செயலாளர் ராமசாமி, பி.வி.சாமி, ஆசிரியர் சுந்தரராமன், நிர்வாகி காரை சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், முகமது சித்திக், விஷ்ணுபெருமாள், வட்டசெயலாளர்கள் ஜான்பீட்டர், தாய்சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேவிநாச்சியப்பன் நன்றி கூறினார்.

Tags : Ponnambala Adigalar ,
× RELATED அறிவியல் தொழில்நுட்பத்தை கடைக்கோடி...