×

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் அதிமுக ஆட்சியில் செய்யப்படாத அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை

பேரையூர், மார்ச் 31: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் நேற்று 15 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களுக்கானக் கூட்டம் நடைபெற்றது. டி.கல்லுப்பட்டி பேரூராட்சி சேர்மன் முத்துகணேசன், துணைசேர்மன் பாண்டிமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் டி.கல்லுப்பட்டியிலுள்ள 15 வார்டுகளிலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் ஒன்று கூட நடக்கவில்லை.

எனவே, தெருச்சாலை, கழிவுநீர் வாறுகால், தண்ணீர்த்தொட்டி, மின்சார வசதி, தெருவிளக்குகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்தாக வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும், கப்பலூர் டோல்கேட்டில் பேரையூர், டி.கல்லுப்பட்டி, பகுதிகளில் வாழும் பொதுமக்களின் வாகனங்களுக்கான வரி விதிவிலக்கு அளிக்க வேண்டும், இதற்கனத் தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில் ஒருமனதாக நிறைவேற்றினர்.

Tags : DMK ,AIADMK ,D.Kallupatti ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...