×

நத்தம் பேரூராட்சியில் தூய்மை பணியாளருக்கு சீருடை

நத்தம், மார்ச் 31: நத்தம் பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் சீருடை வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகிக்க, செயல் அலுவலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் 25 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் உள்பட பேரூராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா பாராட்டு தெரிவித்ததுடன், கறி விருந்து அளித்து சிறப்பு செய்தார்.

Tags : Natham Municipality ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...