×

நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

கடலூர், மார்ச் 31: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் நகர தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஓவியர் ரமேஷ், வட்டார தலைவர் சீத்தாராமன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் வரவேற்றார் .மாவட்ட தலைவர் திலகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நகர காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூர் மாநகராட்சியின் அடிப்படை பிரச்னைகளை புதிய மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தரப்பினர் முழுமையாக மேற்கொண்டு தீர்வு காணவேண்டும். அனைத்து ரயில்களும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். கடலூர் மாநகராட்சியின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்தரும் திட்டங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : City Congress ,
× RELATED காங்கிரஸ் கட்சி சார்பில் கீழப்பாவூரில் இருசக்கர வாகன ஊர்வலம்