×

கீழப்பாவூர் பேரூராட்சி கோட்டையூரில் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை

பாவூர்சத்திரம், மார்ச் 30: கீழப்பாவூர் பேரூராட்சி கோட்டையூரில் அனைத்து இணைப்புகளுக்கும் குடிநீர் சீராக கிடைக்க பேரூராட்சி தலைவர் ராஜன் நடவடிக்கை மேற்கொண்டார்.கீழப்பாவூர் பேரூராட்சி 2வது வார்டு பகுதியான கோட்டையூரில் வீடுகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு லைனில் குடிநீர் விநியோகம் செய்து வந்ததால், குடிநீர் சீராக அனைத்து இணைப்புகளுக்கும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் 2 பிரிவாக பிரித்து குடிநீர் விநியோகம் செய்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அவரது ஏற்பாட்டின் பேரில் 2 பிரிவாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், புதிதாக வால்வு அமைக்கப்பட்டது. இதனை பேரூராட்சி தலைவர் ராஜன் இயக்கி வைத்தார். நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித்தந்த பேரூராட்சி தலைவர் ராஜனுக்கு கோட்டையூர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Kottaiyur, ,Keelappavoor Municipality ,
× RELATED கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலில் பங்குஉத்திர பிரம்மோற்சவ தீர்த்தவாரி