×

சாயர்புரம் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி சான்று

ஏரல், மார்ச் 30: சாயர்
புரம் கூட்டுறவு வங்கியில், பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகை வழங்கும் நிகழ்ச்சி, சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. வங்கி தலைவர் அறவாழி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ரவிந்தீரன், வங்கி செயலர் சகுந்தலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு சாயர்புரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் 48 பேருக்கு ரூ.15.80 லட்சம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் நகையை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் வை. கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி துணை தலைவர் பிரியாமேரி ஜெயசீலன், கவுன்சிலர் கண்ணன், பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்சேகர், மாவட்ட காங். துணை தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், இளைஞர் காங். தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன், வை. வடக்கு வட்டார தலைவர் சொரிமுத்துபிரதாபன், மகளிரணி பீரவிணா, சாயர்புரம் நகர தலைவர் ஜேக்கப் மற்றும் வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் பண்டாரம், தங்கவேல், பெரியசெல்வம், ஜானகி, பிரேம்குமார், ராஜசேகர், சுசீலா, தேவதாஸ் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்
தூத்துக்குடியில் துணிகரம்.

Tags : Sawyerpuram Co- ,Bank ,
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...