×

திருவையாறு அருகே மூதாட்டி மர்ம சாவு

திருவையாறு.மார்ச் 30: திருவையாறு அடுத்த மேல உத்தமநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மங்களம்(80). இவர் தனது மகன் பழனி. வீட்டு பக்கத்திலேயே குடிசைபோட்டு வசித்து வருகிறார். இவர் கடந்த 28ம் தேதி காலை 100 நாள் வேலைக்காக போட்டோ எடுப்பதற்காக மேல உத்தமநல்லூரிலிருந்து ஈச்சங்குடி வந்து ஈச்சங்குடியிலிருந்து பஸ் மூலம் திருவையாறு வந்துள்ளார். திருவையாறில் போட்டோ எடுத்துகொண்டு திருவையாறிலிருந்து வைரவன்கோவில் வந்து பஸ்லிருந்து இறங்கி காவிரி ஆற்று குறுக்கே நடந்து மேல உத்தமநல்லூர் சென்றுள்ளார். ஆனால் அவர் வீடுக்கு வரவில்லை. நேற்று காலையில் காவிரி ஆற்றில் மங்களம் இறந்துகிடப்பதாக பொதுமக்கள் பார்த்து மகன் பழனியிடம் தகவல் தெரிவித்தனர். இது சம்மந்தமாக திருவையாறு காவல் நிலையத்தில் மகன் பழனி(62) கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப்.இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மங்களம் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvaiyaru ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா