×

கரூர் தெரசா கார்னர் பகுதியில் விபத்துகளை தடுக்க பேரிகார்டு

கரூர், மார்ச்30: கரூர் காந்திகிராமம் ரயில்வே மேம்பால நுழைவு வாயில் பகுதிகளில் பேரிகார்டு வைத்துள்ளது போல, தெரசா கார்னர் பகுதியிலும் அமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் திருச்சி சாலையில், காந்திகிராமம் பகுதியை தாண்டியதும் ரயில்வே மேம்பாலம் உள்ளது. குறுகிய நிலையில் உள்ள இந்த பாலத்தில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வந்தது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சாலையின் நுழைவு வாயில் பகுதிகளில் பேரிகார்டு வைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே போல், கரூர் திருச்சி சாலை சுங்ககேட் பகுதியை தாண்டியதும் தெரசா கார்னர் பகுதித உள்ளது. இந்த பகுதியில் நான்கு வழிகளில் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த பகுதியிலும் அடிக்கடி இரண்டு சக்கர வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் தெரசா கார்னர் பகுதியிலும் பேரிகார்டு வைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரசா கார்னர் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Theresa Corner ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...