×

காருக்கு கட்டணம் செலுத்த மறுத்து டோல்கேட் ஊழியர் மீது தாக்குதல்

ஆத்தூர், மார்ச் 30: தலைவாசல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் காருக்கு கட்டணம் கேட்ட பெண் ஊழியரை தாக்கிய, திமுக இளைஞர் அணி நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரையில் தேசிய நெடுஞ்சாலையில் டோல்ககேட் உள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று டோல்கேட்டுக்கு வந்தது. அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் காருக்கு கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளாளர். ஆனால் காரில் இருந்தவர்கள், தாங்கள் கட்டணம் செலுத்த மாட்டோம் எனக்கூறி பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்ேபாது அங்கு வந்த தலைவாசல் திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிவாஸ், கட்டணம் செலுத்த சொன்ன டோல்கேட் ஊழியர் நிர்மலா தேவி(49) என்பவரை தாக்கியதுடன், காரை அனுப்பி வைத்தார். காயமடைந்த நிர்மலா தேவி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நிர்மலா தேவி, தலைவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டோல்கேட் பெண் ஊழியரை தாக்கிய திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிவாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Tolkien ,
× RELATED சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரத்தில்...