சிங்கம்புணரி அருகே மதுரை மாவட்டம் கண்டுக்கபட்டியை சேர்ந்த தனுஷ்கோடி மகன் குபேரன் (22). ஜேசிபி ஆபரேட்டர். இவர் நேற்று முன்தினம் சூரக்குடி கோவில்பட்டி பகுதிக்கு வேலை சம்பந்தமாக சென்றார். குபேரனின் தாய் சாத்தம்மாளை வீட்டு மாடு முட்டியதில் படுகாயமடைந்து சிங்கம்புணரி தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குபேரன் டூவீலரில் சென்றுள்ளார் அப்போது முன்னால் சென்ற பஸ்சை முந்த முயன்ற போது காளாப்பூரை சேர்ந்த ராஜேஷ் வந்த டூவீலருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த குபேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ராஜேஷ் சிங்கம்புணரி ஜிஹெச்சில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.