×

அரூர் அருகே கூட்டுறவு சங்கம் முற்றுகை

அரூர், மார்ச் 26: அரூர் அருகே நரிப்பள்ளியில் கே.கே.168 நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் நரிப்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியான மந்திக்குளம்பட்டி, சிக்களூர், பெரியப்பட்டி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் 1400 பேர் உறுப்பினர்களான உள்ளனர். 10 வருடங்களுக்கும் மேலாக இந்த கூட்டுறவு வங்கியில் வரவு செலவு வைத்துள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள், நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். திடீரென அரூர் நரிப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  தகவலின்பேரில், கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரசப்படுத்தினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அந்த வழியாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Co-operative Society ,Arur ,
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்