போச்சம்பள்ளி மார்ச் 26: போச்சம்பள்ளி கிளை நூலகத்தில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு புரவலர்கள் இணையும் நிகழ்ச்சி, மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் முருகன், சிவக்குமார், திருமாள், அம்பிகா, கோவிந்தராஜ், மணிமேகலை, பூவரசன் ஆகியோர் தலா ₹1000 செலுத்தி புரவலர்களாக சேர்ந்தனர். கிளை நூலகர் செந்தில்குமார் நன்றி கூறினார்.