×

நன்னிலம் அருகே பெண் தற்கொலை

நன்னிலம், மார்ச் 26: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள செருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக ராதிகாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி அன்று இரவு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த ராதிகா வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டு உள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை மருத்துவ சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 23ம் தேதி இரவு ராதிகா உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Nannilam ,
× RELATED அனல் பறக்கும் பிரசாரத்தில்...