×

ஆண்டிமடம் பகுதியில் நீர்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

ஆண்டிமடம்,மார்ச் 26: அரியலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக கலெக்டர் உத்தரவின்படி நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை ஊராட்சிக்கு உட்பட்ட நீர்நிலை மற்றும் நெடுஞ்சாலை துறை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.தமிழ் மாமுனிவர் அகத்தியர் வழிபட்ட தலம் ஆண்டிமடம் விளந்தை பகுதியில் மேல அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே திருக்குளம் உள்ளது. திருக்குளத்தின் கரையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதிகளில் நீண்ட நாட்களாக சிலர் ஆக்கிரமித்து கடைகள், கட்டிடங்கள் அமைத்து இருந்தனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திருக்குளத்தின் கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடியாக ஆண்டிமடம் -விளந்தை முக்கிய பகுதியில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Andimadam ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது