வேலாயுதம்பாளையம், மார்ச் 26: புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னை வன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர்,சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில், நஞ்சை புகளூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி உடனுறை மாதேஸ்வரன் கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.