×

நாசாவின் பாராட்டு பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள்

கோவை, மார்ச் 25:  கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரமீஷா, சுவேதா ஆகிய மாணவிகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இவர்கள் குறுங்கோள் கண்டறியும் முகாமில் பங்கு கொண்டு புதிய குறுங்கோள்களை கண்டறிவதில் ஆற்றிய பங்கினை பாராட்டி, விஞ்ஞான் பிரசார் மூலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெற்ற இம்முகாம், அறிவியல் பலகை, திருச்சி ஆஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு ஆஸ்ட்ரோநாமிக்கல் சயின்ஸ் சொசைட்டி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இம்மாணவியர் கோவை ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் இம்முகாமில் பங்கு பெற்றனர். நாசா மூலம் வழங்கப்பட்ட செயலி மூலம் 21 குறுங்கோள்களை இம்மாணவியரின் குழு கண்டறிந்து உள்ளது. இதனை நாசா அங்கீகரித்துள்ளது. மாணவியரின் இம்முயற்சியை பாரட்டும் பொருட்டு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் மாணவியரை நேரில் சந்தித்து பாராட்டினார். மாணவியர் தாங்கள் செயல்பட்ட விதத்தை கலெக்டரிடம் விளக்கி கூறினர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ், கோவை ஆஸ்ட்ரோ கிளப் செயலாளர் சாய்லட்சுமி, ஆசிரியர்கள் மங்கையர்கரசி, நாகராஜ், கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : NASA ,
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...