×

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ்

உடுமலை,மார்ச்25: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் அனிக்கடவு ஊராட்சி ராமசந்திராபுரம், வாகைத்தொழுவு,புதுப்பாளையம் ஊராட்சி அடிவெள்ளி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்ற 500 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. .நிகழ்ச்சியில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கிரி, திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், கொமதேக மாவட்டச் செயலாளர் ரகுபதி ராகவன் முன்னிலையில் அனைவருக்கும் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய அணி சார்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Startup Agricultural Cooperative Society ,
× RELATED திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு; பூக்கள் விலை குறைவு