×

பள்ளி குழந்தைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்

காரியாபட்டி, மார்ச் 25: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அமலா தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு இலவச குடிநீர் விநியோகிக்க 4 சின்டெக்ஸ் தொட்டிகளை பேரூராட்சி 12ம் வார்டு கவுன்சிலர் சத்தியபாமா, எஸ்விஎஸ் வாட்டர் நிறுவனர் தாமோதரகண்ணன் வழங்கினர். பேரூராட்சி திமுக சேர்மன் செந்தில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது, தினமும் ஆயிரத்து 200 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை சேர்மன் ரூபி சந்தோசம், பள்ளி நிர்வாகி அருட்சகோதரி எலிசபெத்ராணி, தலைமை ஆசிரியர் அருட்சகோதரி விக்டோரியா, கவுன்சிலர்கள் சத்தியபாமா தாமோதர கண்ணன், சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : Chairman of ,Kariyapatti ,Municipality ,
× RELATED காரியாபட்டி நகரில் தேங்கி கிடக்கும்...