×

முத்துப்பேட்டை அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பு 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது

முத்துப்பேட்டை, மார்ச் 25: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது மன்னார்குடி சாலையில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது மூவரும் பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை தாக்க முயன்றனர். உடன் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் கோவிலூர் மணல்மேட்டை சேர்ந்த கைலாசம் மகன் மந்திரமூர்த்தி(24), சென்னையை சேர்ந்த சரவணன் மகன் குதிரை சுரேஷ்(24), முதலி மகன் லியோ கார்த்திக்(22) என்பதும், இதில் மந்திரமூர்த்தி அதிமுக பிரமுகர் மதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும், மேலும் மூவர் மீதும் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...