×

கூத்தாநல்லூர் அருகே புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, மார்ச் 25: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த வெள்ளக்குடியில் கச்சா எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசி நிர்வாகம் புதிய கிணறுகளை நிறுவ முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இந்த புதிய கிணறு அமைக்கப்படும் பட்சத்தில் அதங்குடி, விழல்கோட்டகம், பொதக்குடி, கற்கோயில், கருவேலங்குளம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் கேள்விக்குறியாகி விடும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்தும், ஓஎன்ஜிசி நிர்வாகம் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்தியும் கூத்தாநல்லூர் அடுத்த வெள்ளக்குடியில் எண்ணெய் கிணறு அமைந்துள்ள பகுதியில் சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் ஞான மோகன் தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : ONGC ,Koothanallur ,
× RELATED மதுபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்துக்கொன்ற தந்தை