ஒரத்தநாடு மார்ச்25::ஒரத்தநாடு பகுதியில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் காந்த் நேரில் ஆய்வு செய்தார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஈச்சங்கோட்டை , பொய்யுண்டார்கோட்டை , தெக்கூர், ஆதனக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் காந்த் ( வளர்ச்சி) பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.அப்போது ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், ஒரத்தநாடு ஒன்றிய துணை ஆணையர் துரை ரகுநாதன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.