×

பெரம்பலூரில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்,மார்ச்.25: பெரம்பலூரில் உலக காசநோய் தினத்தையொட்டி மாணவ மாணவியர் பங்கேற்ற விழி ப்புணர்வு பேரணி நடைபெ ற்றது.உலக காசநோய் தினமான து ஒவ்வொரு வருடமும் மா ர்ச் 24-ஆம் தேதி கடைபிடிக் கப்படுகிறது. இதையொட்டிபெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கிய பேரணி யை காசநோய் துணை இ யக்குனர் நெடுஞ்செழியன், அரசு மருத்துவமனை கண் காணிப்பாளர் டாக்டர் அர் ஜுனன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோகன் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மரு த்துவ.கல்லூரி, நர்சிங் கல்லூரி, சீனிவாசன் நர்சிங் கல்லூரி, தந்தை ரோவர் நர்சிங் கல்லூரி,கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரி ஆகியவற்றைசேர்ந்த மாணவ,மாணவிகள் மற்றும் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டப் பணியாளர்கள் கலந்து கொ ண்டனர். பேரணி அரசு மருத்துவமனையிலிருந்து தொடங்கி பழைய பஸ்டாண்டு, காமராஜர் வளைவு சங்கு பேட்டை, ஸ்டேட் பேங்க் வழியாக பாலக்க ரையில் முடிவடைந்தது.பெ ரம்பலூர் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு பணியாளர்கள் பேரணிக்கான ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.


Tags : World TB Day Awareness Rally ,Perambalur ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...