×

இறந்து கரை ஒதுங்கிய டால்பின் மீன் காரைக்காலில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

காரைக்கால், மார்ச் 25: காரைக்காலில் 11ம் வகுப்பு படிக்கும் 16வயது பள்ளி சிறுமிக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் தாய் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பம் அடைந்து இருப்பதாகவும், அவருக்கு ஆண் குழந்தை பிறந்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியிடம் விசாரணை செய்துள்ளார். விசாரணையில் திருப்பட்டினம் கீழையூர், தெற்கு வீதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் படையப்பா (எ) சரண்ராஜ் (24) என்பவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக சிறுமியும், சரண்ராஜும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் திருபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருப்பட்டினம் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சரண்ராஜை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Valipar Bokso ,
× RELATED மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது