×

சாயர்புரத்தில் நாளை மாநில பளுதூக்கும் போட்டி துவக்கம்

ஏரல், மார்ச் 24: தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள்- பெண்களுக்கான 2021-22ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டி, சாயர்புரம் போப் பள்ளி நூற்றாண்டு மண்டபத்தில்  நாளை(25ம் தேதி)  முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. தொடக்க விழாவிற்கு சங்க தலைவர் ராஜேஷ் ரவிசந்தர் தலைமை வகிக்கிறார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் அசோக் வரவேற்கிறார். போட்டியை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி பங்கேற்கிறார். 27ம் தேதி மாலை 4 மணிக்கு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறார். ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் ராஜேஷ் ரவிசந்தர், அசோக், நெல்சன் பொன்ராஜ், தர், நவராஜ் புல்கானின் டேனியல், பால்ராம், குணசேகர், தமிழரசன், செல்வின், பிரதீப், செண்பகமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் ஈஸ்டர், அலெக்ஸ் ஞானமுத்து, அற்புதராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Sayarpuram ,
× RELATED சிவத்தையாபுரத்தில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்