×

திருத்துறைப்பூண்டியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் அதிலிருந்து நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஏடிஎஸ்பி கணேசன் தலைமையில் போலீஸ் டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சைபர் கிரைம் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது அதனை எப்படி தடுப்பது, வங்கி சம்பந்தப்பட்ட ஒடிபி, பாஸ்வேர்டு உள்ளிட்ட விபரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் குறித்து 1930 என்ற இலவச நம்பரை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக உதவ போலீசார் தயாராக இருக்கின்றனர் என்று அறிவுறுத்தப்பட்டது.


Tags : Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே...