×

தென்காசி கூட்டுறவு வங்கியில் நகைகடன் தள்ளுபடி சான்றிதழ்

தென்காசி, மார்ச் 23: திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தென்காசி கிளையில் தள்ளுபடி செய்யப்பட்ட பொது நகை கடன் மற்றும் அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெற்றுள்ள பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து தென்காசியில் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அளித்த 5 பவுன் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் நகைகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சுபாஷினி தலைமை வகித்தார். தென்காசி நகர திமுக செயலாளரும், நகர்மன்ற தலைவருமான சாதிர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் நகையை வழங்கி துவக்கி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா முன்னிலை வகித்தார்.

 கிளை மேலாளர் உச்சிமாகாளி வரவேற்றார். திமுக நகர துணைச்செயலாளர் பால்ராஜ், பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், தொண்டரணி கோபால்ராம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை, இளைஞரணி வெங்கடேஷ், ராம் துரை, சுபேர், பரமசிவன், பழனி சங்கர், சங்க மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம், களமேலாளர் ரவிச்சந்திரன், காசாளர் முகமது ஹஷன்ஷா, உதவி மேலாளர் வேம்புராஜ், உதவியாளர்கள் சுபா, ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  
தொமுச பொது செயலாளர் ஜெயராம் நன்றி கூறினார். விழாவில் மொத்தம் 265 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 16 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tenkasi Co-operative Bank ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது