×

ஆண்டிமடம் அருகே கதண்டு கடித்து 7 பேர் காயம்

ஆண்டிமடம்,மார்ச்23: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் மடத்து தெருவில் ஜேசிபி எந்திரம் மூலம் ஆர்.எஸ்பதி உள்ளிட்ட சில மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு இடையூறாக இருந்த ஒரு கருவேல மரத்தை அப்புறப்படுத்திய போது அதிலிருந்த கதண்டு கூடுகள் கலைந்து அங்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த கூவத்தூர் மடத்து தெருவைச் சேர்ந்த பாலு, விழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், டி.மங்கலத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன், முருகேசன், ரவிச்சந்திரன்,மற்றும் அங்கு நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த அமலோற்பவமேரி (70) மற்றும் அவரது மகள் அடைக்கலமேரி (54) ஆகிய 7 பேரையும் கதண்டுகள் துரத்தி துரத்தி கடித்தது.இதில் காயமடைந்த இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அமலோற்பவமேரி மற்றும் அவரது மகள் அடைக்கலமேரி ஆகிய இருவரும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 5 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Tags : Andimadam ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது