×

பெருங்களூர் ஊராட்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள் முகாம்

கந்தர்வகோட்டை, மார்ச் 23: புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சியில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாமிட்டு விவசாயிகளுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு நாற்று பரிப்பது, நடவு செய்வது, பூப்பறிப்பது குறித்தும், கோழிப்பண்ணையில் களப்பணி செய்து பயிற்சி பெறுவது என பல்வேறு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பகுதி விவசாயிகளுடன் கல்லூரி மாணவி இணைந்து கள பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், ஒரு கட்டமாக புதுக்கோட்டை சிப்காட்டில் உள்ள இயற்கை விவசாய உற்பத்தியாளர் சங்கத்தை சென்று பார்வையிட்டனர். மேலும் இயற்கை முறையில் ரசாயன உரம் இல்லாமல் பயிர் செய்வது எப்படி என்றும் மகசூல் அளவு குறித்தும் கேறட்டு அறிந்து கொண்டார். கல்லூரி மாணவிகள் பெருங்களூர் ஊராட்சியில் தங்கி அனுபவ அறிவு பெற பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர் உதவி செய்து வருவதாக தெரிவித்தனர்.


Tags : Agricultural ,College ,Camp ,Perungalur Panchayat ,
× RELATED நீடாமங்கலம் வேளாண் அறிவியல்...