×

ராசிபுரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம், மார்ச் 22: சர்வதேச காசநோய் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம்-2025 சார்பில், ராசிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து காசநோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தின. பேரணியை ராசிபுரம் நகரமன்றத் தலைவர் கவிதா சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராசிபுரம் அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணி, சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. முன்னதாக, காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்தது. பேரணியில், ராசிபுரம் அரசு மருத்துவமனை அலுவலர் கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர்கள் செல்வி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுரேந்திரன், கதிரேசன், சீனிவாசன் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் கல்லூரி நர்சிங் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்