×

வீட்டுமனை பட்டா கோரி பெண்கள் ஆர்டிஓவிடம்

மனுஓசூர், மார்ச் 22:  ஓசூர் அடுத்த எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த பெண்கள், நேற்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்டிஓ மலர்விழியிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டியல் இன குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். வாடகை வீடுகளில் வசிக்கும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி தாசில்தார், ஆர்டிஓவிடம் பல முறை மனு அளித்ததை அடுத்து, 50 நபர்களுக்கு ஒட்டர்பாளையம் என்ற இடத்தில் இலவச வீட்டுமனை வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள், பணம் பெற்றுக்கொண்டு, எங்களுக்கு வழங்க வேண்டிய இலவச வீட்டு மனைகளை, தகுதியில்லாத வேறு நபர்களுக்கு வழங்க  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, முறையாக தேர்வான பயனாளிகளுக்கு மட்டும் வீட்டுமனைகளை வழங்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : RTO ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு