×

வத்திராயிருப்பில் இருந்து கிராமப்புறங்களுக்கு கூடுதல் அரசு பஸ்கள் மாணவர்கள் கோரிக்கை

வத்திராயிருப்பு, மார்ச் 22: வத்திரயிருப்பில் இருந்து கிராமங்களுக்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என, மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பில் உள்ள பள்ளிகளில் கான்சாபுரம், கூமாபட்டி, பிளவக்கல் அணை, சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, மாத்தூர், புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் அரசு பஸ்களில் வந்து படித்து தங்கள் ஊர்களுக்கு செல்கிறார்கள். வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது.

வத்திராயிருப்பில் இருந்து கிராமப்புறங்களுக்கு கூடுதல் அரசு பஸ்களை காலை, மாலை நேரங்களில் இயக்கப்படவில்லை. இதனால் பஸ்களில் காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் கூட்டம் அதிகரிக்கிறது. ஆபத்தான பயணம் என்று தெரிந்தும் வேறு வழியின்றி படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் காலை, மாலை வேளைகளில் வத்திராயிருப்பில் இருந்து கூடுதல் அரசு பஸ்களை இயக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Vatri ,
× RELATED வத்திராயிருப்பு அருகே அதிரடி திருமண ஜோடிக்கு காஸ் சிலிண்டர் பரிசு