×

பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

அவிநாசி. மார்ச் 22:  பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையம் அவிநாசியில் இயங்கி வருகிறது. இதில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில், தமிழகம், கேரளா  உள்ளடக்கிய  130க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்தும், பணி நிறுத்தப் போவதையும் கண்டித்து அவிநாசி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் நேற்று மாலை அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மைய தனியார் ஒப்பந்ததாரரிடம் கேட்ட போது, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் ஜூலை மாதம் வரை சேவை மையத்தில் ஊழியர்கள் பணியாற்றலாம். தற்சமயம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், நிறுவனத்தின் முன்வைப்புத் தொகையை முடக்கியுள்ளது. இது மார்ச் 28 ஆம் தேதிக்குள் சீரமைக்கப்பட்டு, உரிய முறையில் ஊழியர்களுக்கு விரைவில் நிலுவை ஊதியம் வழங்கப்படும்‘ என்றனர்.

Tags : BSNL ,
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு