திருத்துறைப்பூண்டி, மார்ச் 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 7வது வார்டில் சாலைகளில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் தூய்மைபணிகள் நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் பணிகளை துவக்கி வைத்தார். இதில் திமுக நகர செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன், கவுன்சிலர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.