×

குளித்தலை அருகே பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி

குளித்தலை, மார்ச் 19: திருச்சி ரங்கம் அருகே கொடியாலம் அடுத்த கீழ சுப்பராயன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(55). இவரது மகன் கிருஷ்ணா(21). இவர் நண்பர் கரிகாலனுடன் நெய்தலூர் காலனியில் நடந்த உறவினர் வீட்டு காதணி விழாவுக்கு நேற்றுமுன்தினம் பைக்கில் சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் ஒத்தக்கடை-திருச்சி செல்லும் சாலையில் பால் சொசைட்டி அருகே எதிரே வந்த சரக்கு வேன், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணா மற்றும் கரிகாலனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா இறந்தார். படுகாயம் அடைந்த கரிகாலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Walipur ,
× RELATED ஏடிஎம் மையம் உடைப்பு: ஒடிசா வாலிபர் சுற்றி வளைப்பு