×

பூத்து குலுங்கும் செவ்வந்தி பூக்கள் கரூர் வாங்கல் சாலையில் வடிகால் அமைப்பு பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர், மார்ச் 19: கரூர் வாங்கல் சாலையில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் வாங்கல் சாலையில் கரூரில் இருந்து வாங்கல், மோகனூர், அரசு காலனி, நெரூர், சோமூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் வாங்கல் சாலையின் வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், ஐந்து ரோடு பிரிவு அருகே ஐந்து வழிப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாங்கல் சாலையின் நுழைவு வாயில் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட தூரம் ஒரு வழியில் வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையின் வழியாக செல்லும் வாகனங்களும் இந்த பணிகள் காரணமாக விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி இந்த பணியை விரைந்து முடித்து எளிதான போக்குவரத்து நடைபெற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur Vangal Road ,
× RELATED கரூர் வாங்கல் சாலை அரசு காலணியில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து!