×

திருக்கல்யாணத்தையொட்டி ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 19: திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில், திருக்கல்யாண தினத்தன்று காலை செப்புத் தேரோட்டம் நடக்கும்.
இதன்படி, நேற்று காலை செப்புத் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, மேள, தாளம் முழங்க ஆண்டாள்-ரெங்கமன்னார் கோயிலில் இருந்து நேற்று காலை கோயிலின் அருகே உள்ள செப்பு தேர் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

பின் தேரில் வைத்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. காலை 7 மணியளவில் கோவிந்தா... கோபாலா... என்று கோஷம் எழுப்பியபடி ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழரத வீதி, மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக நான்கு முறை வந்து மீண்டும் தேர் நிலைய அடைந்தது. கலெக்டர் மேகநாத ரெட்டி தங்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.

செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் நகர் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Andal temple ,Tirukkalyanam ,
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...