×

காரியாபட்டி அருகே ஓடும் வேனில் தீ

காரியாபட்டி, மார்ச் 19: தூத்துக்குடியில் இருந்து மதுரை அறுவை மில்லுக்கு கழிவு அட்டையை தூத்துக்குடியை சேர்ந்த மகாராஜா என்பவர் மினிசரக்கு வாகனத்தில் ஏற்றி வந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் காரியாபட்டி அருகே செவல்பட்டி பகுதியில் வந்த போது, திடீரென வேனின் முன்பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட மகாராஜா வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் மூலம் தீயை அணைக்க முயன்றுள்ளார்.

ஆனால் தீ பற்றி வேகமாக எரிந்ததால் அணைக்க முடியவில்லை. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்ததும் காரியாபட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் வாகனம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அட்டை முழுவதும் எரிந்து சேதமானது.  இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kariyapatti ,
× RELATED காரியாபட்டி நகரில் தேங்கி கிடக்கும்...