×

ராசிபுரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை தாக்கிய 2 பேர் கைது: பெண்ணுடன் தலைமறைவான பெற்றோருக்கு வலை

ராசிபுரம், மார்ச் 19: ராசிபுரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை தாக்கி விட்டு, மணப்பெண்ணை கடத்திச் சென்ற 9பேர் மீது வழக்கு பதிந்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அப்பநாயக்கன்பட்டி ஓணாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(23), மெக்கானிக். இவர் கலர்காடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் மகள் சுஜிதா(19) என்பவரை, பெற்றோர் எதிர்ப்பை மீறி, கடந்த 16ம் தேதி சேந்தமங்கலம் அருகேயுள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு, நேற்று முன்தினம் தஞ்சமடைந்த காதல் ஜோடியை, போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசி, கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காதல் மனைவி மற்றும் உறவினர்களுடன், காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அஜித்குமாரை, சுஜிதாவின் உறவினர்கள் போன் மூலம் மிரட்டினர்.

Tags : Rasipuram ,
× RELATED காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர்