தர்மபுரி, மார்ச் 19: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, தர்மபுரியில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள், தங்கள் பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனம் 125 சிசிக்கு மிகாமலும், வாகன விதிமுறை சட்டம் 1998ன்படி பதிவு செய்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ₹25 ஆயிரம், இதில் எது குறைவோ, அத்தொகையை மானியமாக வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.