×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; சிறுவன் போக்சோவில் கைது

திருப்பூர்,மார்ச்19: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பாத்திரப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் சேய் தகவல் தெரிந்து, சிறுமியின் தாய் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags : Pokmon ,
× RELATED வீட்டில் தங்கி இருந்த போது 14 வயது...