×

குண்டாசில் வாலிபர் கைது

பேரையூர் :  பேரையூர் அருகேயுள்ள எஸ்.கீச்ழப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் அலெக்ஸ்பாண்டி(32). இவர் திருட்டு மணல் அள்ளியதாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பேரையூர் டிஎஸ்பி சரோஜா பரிந்துரைபடி கலெக்டர் அனீஷ்சேகர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் அலெக்ஸ்பாண்டியை பேரையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Kundas ,
× RELATED குண்டாஸில் வாலிபர் கைது