×

சாமளாபுரத்தில் குடியிருந்து வரும் அருந்ததிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

திருப்பூர், மார்ச் 17: சாமளாபுரத்தில் குடியிருந்து வருகிற அருந்ததிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என, சாமளாபுரம் நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர் சாமளாபுரம் நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: சாமளாபுரத்தில் கடந்த 150 ஆண்டுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகிற அருந்ததிய மக்கள் 135 பேரின் வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று, திருப்பூர் நீர்வள ஆதார அமைப்பு அலுவலகம் மூலம் கடந்த 1ம் தேதி நோட்டீஸ் வழங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள ஏரியில் மேடான பகுதியில் தான் வசிக்கிறார்கள். குளம் நிறைந்தாலும் இந்த பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. குளம் நிறைந்த போதிலும் சிறிய அணைக்கட்டு மூலமாக கடந்து நொய்யல் ஆற்றில் கலந்து செல்லும். எங்கள் பகுதி ஏரி புறம்போக்கு என வருவாய்த்துறை ஆவணங்களில் இருக்கிறது. எனவே இதனை வகைமாற்றம் செய்து அருந்ததி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Tags : Arundhati ,Samalapuram ,
× RELATED சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் போக்சோவில் 17 வயது சிறுவன் கைது