×

திருச்சுழி அருகே கார் மோதி மூதாட்டி பலி

திருச்சுழி, மார்ச் 15: ராஜபாளையத்தில் இருந்து பரமக்குடி நோக்கி அன்பு சென்ற கார் வந்து கொண்டிருந்தார். திருச்சுழி அருகே மிதலைக்குளம் புளியங்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் டூவீலரில் சென்ற அனிகலக்கியேந்தலை சேர்ந்த சண்முகம்(25) மற்றும் அவரது உறவினர் மாரி(60) ஆகியோர் மீது மோதியது.  தொடர்ந்து நிலைதடுமாறிய கார் பேருந்துக்காக காத்திருந்த குருவு மீதும் மோதி உள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூதாட்டி மாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சண்முகம் மற்றும் பேருந்திற்காக காத்திருந்த குருவு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்குப்பதிவு செய்த திருச்சுழி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மே‌ற்கொ‌ண்டு வருகின்றனர்.

Tags : Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....