×

பெரியகுளம் ராணுவ வீரர் திடீர் மரணம்

பெரியகுளம், மார்ச் 15: பெரியகுளம் அருகே வடுகபட்டி கன்னிமார் கோயில் தெருவை சேர்ந்தவர் சௌமியா (19). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாண்டி (28)க்கும் கடந்த 28 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ் பாண்டி கடந்த 2011ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து ட்ரெயினிங் முடித்து நாயக்காக கோவையிலுள்ள ராணுவ முகாமில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். தற்போது இவர் திருமணத்திற்காக விடுமுறை எடுத்து ஊருக்கு வந்துள்ளார்.

ரமேஷ் பாண்டி கடந்த மார்ச் 7ம் தேதி முதல் உடலில் திடீர் உபாதைகள் ஏற்பட்டு பெரியகுளம் ஜிஹெச்சில் சேர்ந்தார். அங்கு முதலுதவிக்கு பின் க.விலக்கு ஜிஹெச் சென்று, அங்கிருந்து மதுரை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பாண்டி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி சௌமியா அளித்த புகாரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Periyakulam ,
× RELATED மகாசிவராத்திரியை முன்னிட்டு...